நட்ச்சத்திர களம்


களம்-மனிதன் தோன்றிய நாள் முதல் இன்று வரை கால சக்கரத்தின் ஒரு முக்கிய காரணியாகவே இருக்கின்றது.களம் மாற்றங்களை ஏற்படுத்தும், வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் , வாழ்க்கையை உணர வைக்கும், வரலாற்றையும் படைக்கும்.

எல்லா மனிதனும் தனித்தன்மையான களத்தை ஏதிர்கொள்கின்றான். அவற்றில் சில கொண்டாடப்படும், சில அழிக்கப்படும் மேலும் பல வரலாற்றில் மறைக்கப்படும்.ஆனால் ஓவ்வொன்றும் தனித்த்ன்மையான நட்ச்சத்திரங்களே. பதியப்படாத கள நிகழ்வுகளை, அவற்றின் நோக்கத்தை , நேர்மையை வருங்காலம் அறியாமல் போக வாய்ப்புண்டு. மின்னும் கள நிகழ்வுகளை அழியா கல்வெட்டாய் செதுக்கப்பட செய்ய வேண்டும். அந்த முயற்ச்சிக்கான தொகுப்பே இந்த நட்ச்சத்திர களம்.



- நட்ச்சத்திரன்

Tuesday 13 January 2015

தமிழர் திருநாள்..... தை திருநாள் - தைப்பொங்கல் வரலாறு

தமிழர் திருநாள்..... தை திருநாள்



சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள்.  உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.


முதல் நாள் போகிப் பண்டிகை:
       தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
        இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
     போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

      தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
       பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.



மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
          மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
      உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
       உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல்:
      காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
       இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.




 'பூளைப்பூ' + வேப்பிலைக்கொத்து + ஆவாரம்பூக்கொத்து = இம்மூன்றும் சேர்ந்தக கட்டே பூளைப்பூ என்று ஒரே பெயரில் விற்கப்படுகிறது. பொங்கல் தினத்திற்க்கு முன்தினம், இதனை முன்வாயில் கூரையில் செருகி வைப்பர்.




அனைவருக்கும் தை பொங்கல் நல்  வாழ்த்துக்கள் 



நன்றி: விக்கிபீடியா


Wednesday 26 November 2014

மாவீரர் நாள் நவம்பர் 27


மாவீரர் நாள்  நவம்பர் 27


    1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம்லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன் தமிழீழ தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது
      அவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து சிகிச்சை பெறும்போது வீரச்சாவு அடைத்தார்.


      

         மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.





        
           ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது." - தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்



மாவீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்..

துயிலும் இல்லம்


            மதிப்பிற்குரியவர்களே!  இங்கே விதைக்கப்பட்டிருப்பவைகள் எமது மண்ணின் வீரவித்துக்கள். உங்கள் பாதங்களை மெதுவாக பதியுங்கள்




             தமிழ மக்களின் விடிவுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்தவர்கள் மாவீரர்கள். தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரனின் தமிழீழ இலட்-சியம் கனவாகிவிடாமல் அதனை நனவாக்கப் புறப்பட்டு எதிரியுடன் மறப்போர் புரிந்து மண்ணிலும், கடலிலும் தம் உடல்களை வித்தா-க்கிவிட்ட இளைஞர்களும் யுவதிகளும் தமிழ மக்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள்.



            "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." 
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்


         "நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்..."  
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் on மாவீரர் தினம்







மாவீரர் -  அணையாத தீபங்கள்

"நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன."  
                        -  தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன், மாவீரர் தினம்




       எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து, சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த இலட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த இலட்சியத்தை அடைந்தே தீருவோமென றுதியெடுத்துக்கொள்வோமாக.


"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

நட்சத்திரன்

தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதிவு

தேசிய தலைவர் மேதகு .வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

 



தலைவர் பற்றி அரிய சில குறிப்புகள் இதோ..
பிறந்த தேதி: 26.11.1954 முன்னிரவு 7 மணி 18 நிமிடம்.
2 சகோதரிகள், மற்றும் 1 சகோதரர். (சகோதரர் டென்மார்கில், சகோதரிகளில் ஒருவர் இந்தியா மற்றையவர் கனடா)
சிறுவதில் விளையாடுவது: வாலி-போல் ,
சிறுவதில் பிடித்த உணவு: பிட்டு , தேங்காய் சம்பல், இரால் வறுவல்.
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்தவர்கள்: சுபாஷ் சந்திரபோஸ், கரிகால மன்னன், திருப்பூர் குமரன், வாஞ்சிநாத ஐயர், மேலும் பலர்..
பிடித்த நூல்: பகவத்கீதை, பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள்
பிடித்த ஆங்கில நடிகர்: கிளீன் -டிஸ்-வூட்
பொழுதுபோக்கில் பிடித்தவை: புத்தகம் வாசித்தல், சமைத்தல்,
வளர்ந்த நிலையில் அவரைக் கவர்ந்த உணவுகள்: சீன உணவுகள், உடும்பு இறைச்சி, ரால் வறுவல்,
மனதை பாதித்த விடையம்: 4 வயதாக இருக்கும்போது(1958ல்) நடந்த இனக் கலவரம்
இளவயதில் அவரைக் வெகுவாகக் கவர்ர்ந்த அரசியல்வாதி, திரு. நவரட்ணம் மற்றும் வேணுகோபால் மாஸ்டர்
இளவயதில் இணைந்த அமைப்பு: "தமிழ் மாணவர் பேரவை", மற்றும் தமிழ் இளைஞர் பேரவை
பிரபாகரனுக்கு முதல் முதலாக துப்பாக்கி விற்ற நபர் பெயர்: சம்பந்தன்(பருத்தித்துறையில் வசித்து வந்தவர்)
கைத்துப்பாக்கியின் விலை: 150 ரூபா: தனது மோதிரத்தை விற்று பிரபாகரன் அந்த கை துப்பாக்கியை வாங்கினார்.

                    1983 செப்டெம்பர் மாதம் யாழ் பல்கலைக் கழகத்தில் மதிவதனி உட்பட 5 பேர் உண்ணாவிரம் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து சோர்வடைந்து இறக்கும் தறுவாயில் இருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு சென்றார் பிரபாகரன். அங்கே அவர்கள் சென்னையில் இந்திரா நகரில் உள்ள அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வீட்டில் 5 வரும் தங்கி இருந்தார்கள். பிரபாகரன் ஒரு போராளி அவர் ஒரு இயக்கத்தை கொண்டு நடத்துகிறார் என்று மக்களால் அறியப்பட்டவர். அவரை பார்த்தாலே பலருக்கு பயமாக இருக்கும். ஆனால் நான் அவர் மேல் மஞ்சல் தண்ணீரை ஊற்றுவேன் ... எனக்கு அவர்மேல் பயம் கிடையாது என்று தோழிகளிடம் சவால் விட்டவர் வேறு யாரும் அல்ல மதிவதனி தான். இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிப் பண்டிகை தினத்தில், பிரபாகரன் அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு வரவே, சற்றும் பயப்பிடாமல் மஞ்சல் தண்ணீரை எடுத்து பிரபாகரன் மேல் ஊற்றிவிட்டார் மதிவதனி. இதனால் சடுதியாக கோபம் அடைந்த பிரபாகரன் அவரை கடிந்து தள்ளினார்.
அழுதுகொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்த மதிவதனி அவ்விடத்தை விட்டு எழுந்துகொள்ளவே இல்லை. நீண்டநேரம் அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பேசிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்ட தயாரான பிரபாகரன், அங்கே ஒரு முலையில் மதிவதனி உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பதை கவனித்தார். கிட்டச் சென்று அழவேன்டாம் என்று ஆறுதல் கூறினார். அன்றில் இருந்துதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது. பின்னர் ஒரு நாள் அவர் பூ வாங்கிக்கொண்டு சென்று அன்ரன் பாலசிங்கம் வீட்டிற்கு சென்றவேளை, அவர்கள் காதலை ஆதரித்து, ஆதரவு கொடுத்தது அன்ரன் பாலசிங்கம் தான். 1984ல் இவர்கள் இருவரும் திருமணம் முடித்தார்கள். தலைவரின் சந்தோஷமான நிமிடங்களில், இக்கட்டான காலகட்டங்களில், எல்லாம் அவரோடு துணையாக இருந்தது மதிவதனி அக்கா என்றால் அது மிகையாகாது. 


தலைவர் சிறப்பு பிறந்த நாள் படங்கள்




















Ref: http://www.athirvu.com/newsdetail/1518.html

Sunday 18 May 2014

தமிழ் இன அழிப்பை மறந்த ஊடகங்கள்:

          


   மே 18 2009 இந்த நாளை எந்த தமிழனாலும் மறக்க முடியாது. முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் சிங்கள  மிருகங்களால் படு கொலை செய்ய பட்ட தினம் அது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் நம் மக்களும் ஊடகங்களும் இதை மறந்து போனது மிகவும் வேதனைக்குரியது....

மே18  நாளை மக்களுக்கு நினைவு படுத்தவே இந்த பதிப்பு.

             மே18 தமிழீழ விடுதலைப்புலிகளின் மண்டியிடாத வீரத்தையும், போராடும் புலிகளுக்குத் துணையாக நின்ற மக்களின் தளராத உறுதியையும் வெளிப்படுத்தும் நாள். சிங்களப் பேரினவாதம் விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நாள். பூமிப்பந்திலுள்ள தமிழரின் நெஞ்சங்களில் எல்லாம்; விடுதலை நெருப்பைக் கனன்று எரிய வைத்த நாள்.

                 செந்நெருப்பு என்பது ஆக்கத்தின் குறியீடு. புத்தெழுச்சியின் குறியீடு. அதேநேரம் பேரழிப்பின் குறியீடு. போராளிகளின் மண்டியிடாத வீரம் - மக்களின் தளராத உறுதி இனமொன்றின் பேரழிப்பு  விடுதலைப் போராட்டத்தின் புத்தெழுச்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கே குறிக்கும் குறியீடாகவே செந்நெருப்பு விளங்குகிறது. எனவேதான் மே18 முள்ளிவாய்க்கால் நாளை நாம் “செந்நெருப்புநாள்”  எனப் பெயரிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் காலங்காலமாக நினைவு கொள்ள வேண்டிய நாளாகப் பிரகடனம் செய்கின்றோம். “மே18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்” இனிவருங்காலமெல்லாம், தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரினதும் வாழ்விலும் வரலாற்றிலும் தவறாமல் இடம்பெற வேண்டிய நாளாகத் திகழும்.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

























    மனசாட்சி உள்ள தமிழர்கள் இதை நினைவு கூர்வோம்  தமிழ் இனம் காப்போம் ..

அன்பை போதித்த புத்தனுக்கு மனித படையல் வைத்த சிங்கள கூட்டமே,
உன் தண்டனை நாள் வெகு தொலைவில் இல்லை. ...


"மே 18"  - போர் குற்ற நாள்

விழி, குரல் கொடு ........

-நட்ச்சத்திரன்